மேனை கருவுற்றாள்

காலக்ரமேணாத தயோஹோ ப்ரவ்ருத்தே
          ஸ்வரூபயோக்யே ஸுரதப்ரஸங்கே|
மனோரமம் யௌவனம் உத்வஹந்த்யா
          கர்போஅபவத் ஸ்தாவரராஜபத்ன்யாஹா|| 19

அவ்விணை யர்தம் அழகியைந் திடுநல்
இல்லறம் தொடங்க மனங்கவர் இளமை
மெல்லியல் புவிதாங் கிடுவோன் மனைவி
செல்கா லவழி சேர்ந்தனள் கருதான்.


அருஞ்சொற்பொருள்:
அவ்விணையர் - அ+இணையர் - இமவான் மேனை தம்பதியர்,
புவிதாங்கிடுவோன் - இமவான்,
செல்காலவழி - இல்லறம் தொடங்கி சில காலம் சென்ற பின்னர், ‘காலக்ரமேண அத’.

திருமணத்திற்குப் பின் அவர்கள் தங்கள் நிலைக்குத்தக்கபடி செய்த இல்லறத்தில் காலவழியில் மேனை கருவுற்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக