மைநாகன் பிறந்தான்

அஸூத ஸா நாகவதூ உபபோக்யம்
          மைனாகம் அம்போநிதி பத்த ஸக்யம்|
க்ருத்தேஅபி பக்‌ஷச்சிதி வ்ருத்ரஷத்ரௌ
          அவேதஞாஞம் குலிஷக்‌ஷதானாம்|| 20

நாகக் கன்னியர் நயப்பும் பெற்ற
மாகடல் நட்பதும், விருத்ரன் பகைவன்
ஏகும் சிறகுகள் எறியும் படையால்
நோகா மைந்தனாம் மைநாகன் பெற்றாள்.

மேனை கருவுற்றாள்

காலக்ரமேணாத தயோஹோ ப்ரவ்ருத்தே
          ஸ்வரூபயோக்யே ஸுரதப்ரஸங்கே|
மனோரமம் யௌவனம் உத்வஹந்த்யா
          கர்போஅபவத் ஸ்தாவரராஜபத்ன்யாஹா|| 19

அவ்விணை யர்தம் அழகியைந் திடுநல்
இல்லறம் தொடங்க மனங்கவர் இளமை
மெல்லியல் புவிதாங் கிடுவோன் மனைவி
செல்கா லவழி சேர்ந்தனள் கருதான்.

மேனையை மணந்தான்

ஸ மானஸீம் மேருஸகஹ பித்ரூணாம்
          கன்யாம் குலஸ்ய ஸ்திதயே ஸ்திதிஜ்ஞஹ|
மேனாம் முனீனாமபி மானனீயாம்
          ஆத்மானுருபாம் விதினா உபயேமே|| 18

மேருவின் தோழன் மேநூல்கள் கற்றோன்
ஏருடை பிதுரு ஏற்றமனப் பெண்ணாம்
சீருடை முனிவரும் சிறப்பிக்கும் மேனையைச்
சேர்குலம் நிலைக்கச் சேர்ந்தனன்நன் முறையில்.

மலையரசெனும் மாண்பு

யஜ்ஞாங்க யோனித்வமவேக்‌ஷ்ய யஸ்ய
          ஸாரம் தரித்ரீதரணச்ஷமம் ச|
ப்ரஜாபதிஹி கல்பிதயஜ்ஞபாகம்
          ஷைலாதிபத்யம் ஸ்வயமன்வதிஷ்தத்|| 17

உலகைத் தாங்கிட உறுவலி யும்வேள்விப்
பொருள்கள் தோற்றிடும் பொற்பதும் தான்கண்டு
மலைகட்(கு) அரசெனும் மாண்புடன் வேள்வியினில்
தருமவிர் ஏற்றலும் தந்தனன் அயன்தானாய்.

அடிவுழல் ஆதவன்

ஸப்தர்ஷி ஹஸ்தாவசித அவஷேஷாணி
          யதோ விவஸ்வான் பரிவர்தமானஹ|
பத்மானி யஸ்ய அகரஸரோருஹாணி
          ப்ரவோதயதி உர்த்பமுகைர்மயூகைஹீ|| 16

பதியேழ் முனிவர் பறித்தபின் மிஞ்சும்
சிகரச் சுனைவளர் செந்தா மரைப்போ(து)
அதனை அடிவுழல் ஆதவன் தன்மேல்
முகஞ்செல் கதிர்களால் முகிழ்ந்திடச் செய்வன்.