அஸூத ஸா நாகவதூ உபபோக்யம்
மைனாகம் அம்போநிதி பத்த ஸக்யம்|
க்ருத்தேஅபி பக்ஷச்சிதி வ்ருத்ரஷத்ரௌ
அவேதஞாஞம் குலிஷக்ஷதானாம்|| 20
நாகக் கன்னியர் நயப்பும் பெற்ற
மாகடல் நட்பதும், விருத்ரன் பகைவன்
ஏகும் சிறகுகள் எறியும் படையால்
நோகா மைந்தனாம் மைநாகன் பெற்றாள்.
குமாரசம்பவம்
மகாகவி காளிதாசர் இயற்றியது
(தமிழில் விஜயநரசிம்மன்)
மைநாகன் பிறந்தான்
மேனை கருவுற்றாள்
காலக்ரமேணாத தயோஹோ ப்ரவ்ருத்தே
ஸ்வரூபயோக்யே ஸுரதப்ரஸங்கே|
மனோரமம் யௌவனம் உத்வஹந்த்யா
கர்போஅபவத் ஸ்தாவரராஜபத்ன்யாஹா|| 19
அவ்விணை யர்தம் அழகியைந் திடுநல்
இல்லறம் தொடங்க மனங்கவர் இளமை
மெல்லியல் புவிதாங் கிடுவோன் மனைவி
செல்கா லவழி சேர்ந்தனள் கருதான்.
மேனையை மணந்தான்
ஸ மானஸீம் மேருஸகஹ பித்ரூணாம்
கன்யாம் குலஸ்ய ஸ்திதயே ஸ்திதிஜ்ஞஹ|
மேனாம் முனீனாமபி மானனீயாம்
ஆத்மானுருபாம் விதினா உபயேமே|| 18
மேருவின் தோழன் மேநூல்கள் கற்றோன்
ஏருடை பிதுரு ஏற்றமனப் பெண்ணாம்
சீருடை முனிவரும் சிறப்பிக்கும் மேனையைச்
சேர்குலம் நிலைக்கச் சேர்ந்தனன்நன் முறையில்.
மலையரசெனும் மாண்பு
யஜ்ஞாங்க யோனித்வமவேக்ஷ்ய யஸ்ய
ஸாரம் தரித்ரீதரணச்ஷமம் ச|
ப்ரஜாபதிஹி கல்பிதயஜ்ஞபாகம்
ஷைலாதிபத்யம் ஸ்வயமன்வதிஷ்தத்|| 17
உலகைத் தாங்கிட உறுவலி யும்வேள்விப்
பொருள்கள் தோற்றிடும் பொற்பதும் தான்கண்டு
மலைகட்(கு) அரசெனும் மாண்புடன் வேள்வியினில்
தருமவிர் ஏற்றலும் தந்தனன் அயன்தானாய்.
அடிவுழல் ஆதவன்
ஸப்தர்ஷி ஹஸ்தாவசித அவஷேஷாணி
யதோ விவஸ்வான் பரிவர்தமானஹ|
பத்மானி யஸ்ய அகரஸரோருஹாணி
ப்ரவோதயதி உர்த்பமுகைர்மயூகைஹீ|| 16
பதியேழ் முனிவர் பறித்தபின் மிஞ்சும்
சிகரச் சுனைவளர் செந்தா மரைப்போ(து)
அதனை அடிவுழல் ஆதவன் தன்மேல்
முகஞ்செல் கதிர்களால் முகிழ்ந்திடச் செய்வன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)